2.5 மில்லியன் டொலர் மோசடி : அதிகாரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி குற்றச்சாட்டு
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு தொடர்பான முறைப்பாட்டை ரங்க நிஷாந்த ராஜபக்ச கொடுக்கவில்லை, மாறாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தான் முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று(05.05.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரி மரணத்தில் எழுந்த சந்தேகம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான முறைப்பாட்டை ரங்க நிஷாந்த ராஜபக்ச கொடுத்துள்ளார் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தான் குறித்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், ரங்க நிஷாந்த ராஜபக்ச மரணம் சந்தேகத்திற்குரியது என்று அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இல்லாத இரண்டு நபர்கள் இது தொடர்பாக ஊடகங்கள் மூலம் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்படும்.
ரங்க நிஷாந்த ராஜபக்சவின் உறவினர்களுக்கு அந்த அறிக்கைகளில் சிக்கல் உள்ளது. இந்த அறிக்கைகளால் அவர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உறவினர்கள் வந்து அந்த அறிக்கைகளை வெளியிட்டவர்களுக்கு எதிராக முறைப்பாடு கொடுக்கப்போகிறார்கள் என்றார்.
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam