உலகம் முழுவதும் பரவும் இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் - அமெரிக்காவில் முறைப்பாடு
இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறி அமெரிக்க அரச நிறுவனம் ஒன்று முறைப்பாடு செய்துள்ளது.
பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனம் தாக்கல் செய்துள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்காக செயல்படும் அமெரிக்க அரசாங்கத்தின் NCMEC நிறுவனம் மூலம் குறித்த முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
முறைப்பாடுகள்
இலங்கை சிறுவர்களின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறி அமெரிக்க அரசாங்க நிறுவனம் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பெண் தலைமை ஆய்வாளர் சமந்தா நேற்று கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்குமாறு, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 14 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan