பௌத்த மத அறநிலைய சட்டத்தில் திருத்தம்: அநுர தரப்பு வெளிப்படை
பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளதாக மத புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை மதத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத போதனைகள்
மத போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொளப்படும்.
பௌத்த மத தலைவர்களின் போதனைகள், நடைமுறைகளை சிதைப்பதாகக் கூறப்படும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பௌத்த பிக்குகள் அஸ்கிரி மற்றும் மல்வத்த பீடங்களின் தலைமை பீடாதிபதிகளிடம் இது தொடர்பில் முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.
அந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனத்தைச் செலுத்தியுள்ளது.
அவர்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவதற்காக பௌத்த சமய அறநிலைய சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகள் திருத்தப்பட வேண்டியுள்ளது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
