யாழில் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர்
யாழில் (Jaffna) இடம்பெற்ற இப்தார் நோன்புதிறக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணை த்தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி (Sai Murali) கலந்து கொண்டுள்ளார்.
குறித்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று (02.04.2024) முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இப்தார் நோன்பு நிகழ்வு
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி கலந்து சிறப்பித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்புக்கு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்புதிறப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam