பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளிப்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி
பொலிஸ் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை காணொளி காட்சிப்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பின் (Colombo) புலனாய்வு ஊடக இணையத்தளம் ஒன்றின் தகவல்படி, சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தவின் வாகனம்
இந்தநிலையில், பொதுமக்களின் இத்தகைய நடவடிக்கைகளை சட்டவிரோதமானதாகவோ அல்லது சட்டத்திற்கு எதிரானதாகவோ கருதக்கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களால் காட்சிப்படுத்தப்படும் காணொளிகள் நாட்டின் சட்டங்களின்படி, குற்றங்கள் மற்றும் சிவில் வழக்குகளில் ஆதாரமாக பயன்படுத்தப்படலாம் என்றும் பதில் பொலிஸ மா அதிபர் கூறியுள்ளார்.
அண்மையில் குருநாகல் -வாரியபொல பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) வாகனத்தை காணொளிப்படுத்தியமைக்காக, பொலிஸ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவத்தின் பின்னணியில் பதில் பொலிஸ் மா அதிபரின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த பொலிஸ் அதிகாரியின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்தும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
