காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் குற்றச்சாட்டு
கிளிநாச்சி கௌதாரி முனையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதானி குழுமத்தினால் கௌதாரி முனை பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிக்காக இன்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த செயற்றிட்டம் தொடர்பில் வாத பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
மக்களுக்கு உறுதியான வாக்குறுதிகள்
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் குறிப்பிடுகையில்,
கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் குறித்த பகுதியில் பல வாக்குறுதிகள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு மணல் எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது.
ஆனால் இங்கு எந்த வாக்குறுதிகளும் நடைபெறவில்லை. அதேபோல அதானி குடும்பமும் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்கு முன்னதாக அந்த மக்களுக்கு உறுதியான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிடுகையில், கிளிநொச்சி மக்களுக்கு முழுமையாக திட்டம் தொடர்பில் தெளிவு படுத்தப்படாது பொருட்கள் வழங்குவதாகவும் வாழ்வாதாரம் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
