முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு! ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கை கையளிப்பு
ஜப்பானிய நிறுவனமான தாய்பேயிடம் முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக, சமூக ஊடகங்கள் ஊடாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கையை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய
இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
