முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு! ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கை கையளிப்பு
ஜப்பானிய நிறுவனமான தாய்பேயிடம் முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக, சமூக ஊடகங்கள் ஊடாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் தலைவி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கையை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய
இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri