உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் மீது ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அதிகாரபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட வளங்களை தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் தேர்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்து அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கமைய, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் இவ்வாறு சபைக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளிட்ட வளங்களை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தேர்தல் சட்ட மீறல்கள்
இவ்வாறு வளங்களை பயன்படுத்துவது தேர்தல் சட்ட மீறல் என்பதுடன், ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே உள்ளூராட்சி மன்றத்தின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை உடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri