அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு (Batticaloa) மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருகோணமலையில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசை போட்டிகளில் பங்குபற்றியிருந்தது.
மாவட்ட, மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று இந்த தேசிய போட்டியில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சிறந்த பயிற்சி
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் சாந்தினி தர்மநாதனின் பயிற்றுவிப்பில் இந்த மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
இதனடிப்படையில் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும் ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும் திருப்புகழ் தனியிசையில் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.











உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
