மீண்டும் மூடப்படும் பாடசாலைகள்! கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவிப்பு
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
ஏனைய கிராமப்புற பாடசாலைகள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு |
முந்தைய அறிவிப்பு
எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை. எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பெட்ரோல் இல்லை! வரிசையில் காத்திருப்பதால் பயனில்லை : வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது |
அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சில பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள குறித்த பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரம் வழங்கியிருந்தது.
பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததுடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வாரமும் அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ...குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ News Lankasri

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- படப்பிடிப்பு தள புகைப்படம் Cineulagam

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு News Lankasri
