சர்வகட்சி அரசாங்கம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியினால் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிக்கப்படும் தீர்மானங்கள்
இந்த அழைப்பு தொடர்பில் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பினை நிராகரிக்கப்போவதில்லை எனவும் எந்த அடிப்படையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri