சர்வகட்சி அரசாங்கம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியினால் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிக்கப்படும் தீர்மானங்கள்
இந்த அழைப்பு தொடர்பில் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பினை நிராகரிக்கப்போவதில்லை எனவும் எந்த அடிப்படையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri