எதிரணிகள் ஒன்றிணைய வேண்டும்: டலஸ் அணி எம்.பி. விடுத்துள்ள கோரிக்கை
ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும் இவ்வாறு மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறி டலஸ் அணியுடன் சங்கமித்துள்ள பேராசிரியர் சரித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவுக்கு வரவேண்டும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

அரசு தேர்தலை நடத்தாது

தேர்தலை ஒத்திவைத்து மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்த ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்ததே இந்நாட்டு வரலாறு.அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர்.
தற்போதைய அரசு தேர்தலை நடத்தாது என்றே எண்ணத் தோன்றுகின்றது.எனவே, எதிரணிகள்
தம்மிடையிலான விமர்சனங்களை விடுத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் பரந்துபட்ட
கூட்டணியாக ஒன்றுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri