வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜப்பான் விஜயம்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயமென்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி அவர் இந்த அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என வெளிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு விஜிந்தன் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இருதரப்பு உறவுகள்
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கலந்து கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தவிர அந்நாட்டு அமைச்சரவையின் பிரதம செயலாலர் யோஷிமா ஹயாஷி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் சப்ரியுடன் அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரும் இணைந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan