ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "(அமெரிக்கா) மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளது என கூறப்பட்ட நிலையில் தனது நாடு தற்போது மோதலில் ஈடுபடவில்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒரு மத்தியஸ்தராக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரிய இராணுவ மோதல்
முன்னதாக “ஞாயிற்றுக்கிழமை இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் பாரிய இராணுவ மோதல்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள் என்று ட்ரம்ப் சமூக ஊடகங்களில் வலியுறுத்தியிருந்தார்.
மேரும், ஒரு சமரசம் இன்னும் சாத்தியமாகும் என்றும், அணு செறிவூட்டல் தொடர்பான உடன்பாட்டை எட்ட ஈரானுக்கு "இரண்டாவது வாய்ப்பு" கிடைக்கும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி தெஹ்ரான் லாவிசானில் உள்ள ஒரு நிலத்தடி பதுங்கு குழிக்கு மாற்றப்பட்டதாக இரண்டு தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காமெனியின் மகன் மொஜ்தபா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதாரங்களின்படி, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முந்தைய நடவடிக்கைகளான, “ட்ரூ ப்ராமிஸ் 1” மற்றும் ”ட்ரூ ப்ராமிஸ் 2” ஆகியவற்றின்(2024) போது, உச்ச தலைவரின் குடும்பத்தினரும் முதன்முதலாக பதுங்கு குழிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடித் தாக்குதல்
இஸ்ரேல் மீதான ஈரானின் முதல் நேரடித் தாக்குதலான ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் 1, ஏப்ரல் 13, 2024 அன்று நடந்தது.
இதில் இராணுவ நிறுவல்களை குறிவைத்து 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
டமஸ்கஸில் இரண்டு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர் ஒக்டோபர் 1, 2024 அன்று, முன்னாள் ஹிஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட ஈரானுடன் இணைந்த போராளித் தலைவர்களின் படுகொலைக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய இராணுவ வசதிகளை நோக்கி சுமார் 200 ஏவுகணைகள் குறிவைக்கப்பட்டன.
இந்த ஏவுகணைகள், ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 2 ஐத் தொடர்ந்து நடத்தப்பட்டன.
மஷாத் இலக்கு
இந்நிலையில் நேற்று, இஸ்ரேல் 2,300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மஷாத்(ஈரான்) நகரத்தை குறிவைத்தது.
மத்திய கிழக்கில் உள்ள ஒரு இராஜதந்திர வட்டாரமாக மஷாத் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், ஈரானின் உச்ச தலைவருக்கு நாட்டில் எங்கும் பாதுகாப்பாக இல்லை என்பதற்கான எச்சரிக்கையாகும் என்று ஈரானிய தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் நடவடிக்கையின் முதல் இரவிலேயே காமெனியை அழிக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறியிருந்தது.
எனினும், இஸ்லாமிய குடியரசின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை முற்றிலுமாக அகற்றுவது குறித்து முடிவெடுக்க அவருக்கு இறுதி வாய்ப்பை வழங்க இஸ்ரேலிய அரசாங்கம் அவரை உயிருடன் வைத்திருப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
