அல்பேனியாவில் நியமிக்கப்பட்டுள்ள முதல் AI அமைச்சர் நியமனம்
அல்பேனியாவில் கேள்விப்பத்திர கோரல்களில் 100 வீதம் ஊழலை ஒழிப்பதற்காக புதிய அமைச்சரவையில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது.
பொது நிதி திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் கேள்விப்பத்திர கோரல்களில் ஊழலை எதிர்த்துப் போராடுதல் போன்றன (AI) அமைச்சரின் பொறுப்புகளில் அடங்கும்.
அல்பேனிய மொழியில் 'சூசியா' என்று பொருள்படும் 'டீலா' என்ற அமைச்சர், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அமைச்சராக அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளார் என்று பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உதவியாளர்
பொது கேள்விப்பத்திரங்களில் 100வீத ஊழல் அற்ற நிலையை உறுதி செய்ய டீலா உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார். பாரம்பரிய அல்பேனிய நாட்டின் உடையணிந்த டீலா, இந்த ஆண்டில் இருந்து பொது சேவை தளமான ஈ -அல்பேனியாவில் டிஜிட்டல் உதவியாளராகவும் செயற்படுகிறார்.

ஈ-அல்பேனியா வலைத்தளத்தை அணுகவும் மற்றும் சுமார் ஒரு மில்லியன் டிஜிட்டல் ஆவணங்களை மக்கள் பெற்றுக் கொள்ள 'டீலா' என்ற (AI) உதவியுள்ளது.
அல்பேனியா ஒரு வருட காலமாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 1990 ஆம் ஆண்டு கம்யூனிச ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து அல்பேனியாவில் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடும் சவாலையும் புதிய அரசாங்கம் எதிர்கொள்கிறது.
அதன்படி, உள்ளூர் அரச அதிகாரிகளின் நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், புதிய கட்டமைப்புக்கு மாற்றவும் 'டீலா' என்ற (AI) உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri