மீண்டும் குறி வைக்கப்படும் கட்டார்! இஸ்ரேல் பிரதமர் பேச்சால் எழுந்துள்ள பரபரப்பு
கட்டாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை ஒழித்தால் மட்டுமே அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கும் காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உள்ள முக்கிய தடை நீங்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தானது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டார் தாக்குதல்
ஏற்கனவே ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, செவ்வாய்க்கிழமை கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் இஸ்லாமிய, அரபு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மீண்டும் கட்டார் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் தங்களின் ஒவ்வொரு முதன்மையான நகர்வையும் அமெரிக்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து வந்துள்ள இஸ்ரேல், சமீபத்திய கட்டார் மீதான தாக்குதல் முடிவை அமெரிக்காவிடம் இருந்து மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி, இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கை எதையும் முன்னெடுக்க வாய்ப்பில்லை என்றே நிபுணர்களின் வாதமாக உள்ளது.
தாக்குதலுக்கு பின்னர்
மேலும் கட்டார் மீதான தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமரின் பேச்சு, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை முக்கிய முடிவெடுக்க தூண்டியுள்ளது.

காஸாவை திட்டமிட்டபடி கைப்பற்ற கட்டார் வீழ்த்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவே அந்த நாட்டின் சமீபத்திய நகர்வுகள் சுட்டிக்காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், ஹமாஸ் தலைவர்களை ஒழிக்கும் நோக்கில் மீண்டும் கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்றால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகின்றமை குறிப்பிடதக்கது.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam