ஈழத்தமிழர்களின் வழிகளை சொல்லிசையாக வெளிப்படுத்திய அல்பா செந்தமிழ் கலை நிகழ்வு
அல்பா செந்தமிழ் சொல்லிசை நிகழ்வை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) சிறப்பாக நடத்தி நிறைவு செய்துள்ளது.
இந்நிகழ்வு, கடந்த 25.04.2026 சனிக்கிழமை எஸ்பாஸ் பியர் பஷ்லே, 824 அவென்யூ டு லிஸ், 77190 டமாரி லே லிஸ் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
அத்துடன், நிகழ்விற்கான பிரதான ஊடக அனுசரணையை லங்காசிறி, தமிழ்வின், ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகள் சொல்லிசையாக வெளிப்பட்ட தருணம்
அல்பா செந்தமிழ் நிகழ்விற்காக பணியாற்றிய நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், கலைஞர்கள், நடனக் குழுக்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி ஊடகங்கள், சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள், ஆதரவு நல்கிய வர்த்தகர்கள், வாகன சேவை வழங்கியவர்கள் மற்றும் இதர செயல்பாடுகளில் ஈடுபட்ட அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
காலத்தின் தேவையை உணர்ந்து, சமூகத்தின் பிரதிபலிப்பாக கலைஞர்களும் திகழ்ந்துள்ளனர். சமூகத்தின் துன்பங்கள், வலிகள், துயரங்கள் மற்றும் கண்ணீரை சொல்லிசை வழியாக வெளிப்படுத்தி, இளம் இதயங்களை வருடி புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் வழங்கும் கலைஞர்கள் போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
வருங்கால சந்ததியினருக்கு சொல்லப்படும் செய்தி, “நாம் தோத்தவர்கள் அல்ல கொண்ட இலட்சியத்திற்காக மண்டியிடா ஈகம் புரிந்த இனம்” என்பதே ஆகும்.
இந்நிலையில், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO) பிரான்ஸ் நிர்வாகம் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
@paris.natpu அlfa செந்தமிழ் live concert sema vibration #paristamil francetamil #viral #tamiltiktok#rettyathithan #mc ♬ original sound - Paris Natpu