அக்குரேகொட இரட்டைக்கொலை துப்பாக்கித்தாரி தொடர்பில் வெளியான தகவல்
அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடையில் வைத்து நேற்று (21) கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்
விசாரணையில் வெளியான தகவல்
இந்த சந்தேகநபர் கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் என்றும், நேற்று மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொட தெல்துவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் T-56 துப்பாக்கியால் வழக்கறிஞரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
46 வயதான சுனில் ரஞ்சித் என்ற சந்தேகநபர், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் போது இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்.
கொலைக்கான காரணம்
சந்தேக நபரின் ஆரம்ப விசாரணையில், அவர் கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

கொலைக்குப் பிறகு, கொட்டாவ அருகே ஒரு இடத்தில் காரில் இருந்து இறங்கி அம்பலங்கொடைக்கு பேருந்தில் ஏறி சென்றதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.
அதிக குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தேகநபருக்கு கரந்தெனிய சுத்தாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும், கரந்தெனிய சுத்தா தொலைபேசியில் தனக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இந்தக் கொலை நடந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam