சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமான சேவை
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இயக்காத விமான நிறுவனங்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில், விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே, விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீசெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களின் சேவைகளை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam