சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமான சேவை
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இயக்காத விமான நிறுவனங்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில், விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே, விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீசெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களின் சேவைகளை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
