கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான முக்கிய அதிகாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரை சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்க பிஸ்கட்
விமான நிலையத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாத்தறை, ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் வருகை முனையத்தின் கழிப்பறையில் வைத்து பயணி ஒருவரிடம் இருந்து தங்க பிஸ்கட்களை பெற்றுள்ளார். இதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri