இந்தியாவில் மீண்டும் விமான நிலையமொன்றில் விபத்து
இந்தியாவின் (India) குஜராத் (Gujarat) மாநிலத்திலுள்ள ராஜ்கோட் விமான நிலையத்தில் தற்காலிக முனையத்திற்கு வெளியே பயணிகள் பிக் - அப் - டிராப் பகுதியில் விதானம் உடைந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது, இன்று (29.06.2024) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்தில் நபர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மழை
மேலும், இந்தியாவில் தற்போது தொடரும் கடும் மழை காரணமாக குறித்த விதானம் உடைந்து விழுந்துள்ளது.
அதேவேளை, நேற்று (28) டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |