216 பயணிகளுடன் ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா
டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு புறப்பட்டு சென்ற ஏ.ஐ.173 என்ற ஏர் இந்திய விமானம் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி உள்ளதுடன், பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |