மற்றுமொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
ஹொங்கொங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் பணியாளர்களும்
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான AI315, இன்று(16) காலை ஹொங்கொங்கிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்தப் பிரச்சினை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Air India Boeing plane turns around mid-flight after technical issue
— Sky News (@SkyNews) June 16, 2025
Read more🔗https://t.co/EFy3bA8fqN
இதன் பின்னர், நிலையான பாதுகாப்பு நெறிமுறையின்படி, விமானம் புறப்பட்ட இடத்திற்குத் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு
பயணிகளை அவர்களின் இலக்கான டெல்லிக்கு விரைவில் கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், தொழில்நுட்பக் கோளாறின் தன்மை அல்லது விமானத்தின் கால அட்டவணையை மாற்றியமைத்தல் குறித்து ஏர் இந்தியா இன்னும் பொது அறிக்கையை வெளியிடவில்லை.
முன்னதாக, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 229 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
