நடுக்கடல் விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் விமானப்படையினர் களமிறக்கம்
இலங்கைக்கு வெகுதொலைவில் ஆழ்கடல் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றினையடுத்து காணாமல் போன கடற்றொழிலாளர்கள் ஐவரைத் தேடும் பணியில் விமானப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் தெவுந்தறை பிரதேசத்தில் இருந்து நேற்று(27) மாலை கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்களின் படகொன்று, வர்த்தகக் கப்பல் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதில் இருந்த கடற்றொழிலாளர் ஒருவர் காப்பாற்றப்பட்டு, கரைக்கு அழைத்து வரப்பபட்டுள்ளார்.
தேடுதல் நடவடிக்கை
எனினும், ஏனைய நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். அதே போல பேருவளை பிரதேசத்தில் இருந்து கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளான இன்னொரு படகில் இருந்து இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக விமானப்படையின் பெல் ரக ஹெலிகொப்டர் ஒன்றும் சிறிய ரக வை-12 விமானம் ஒன்றும் ஆழ்கடல் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |