கொழும்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி நடவடிக்கை
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பெல் 212 ரக விமானங்கள் மற்றும் ட்ரோன் பயன்படுத்தி இலங்கை பொலிஸாருடன் இணைந்து இலங்கை விமானப்படை கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
கோவிட் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்ததாக விமானப்படைப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நிலைமையை கண்காணிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் பணிப்புரையின் பேரில், பெல் 212 ரக உலங்குவானூர்தி ஒன்று கொழும்பு பிரதேசம் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
புதிய களனி தியத உயன, பஞ்சிகாவத்தை, ஆயுர்வேத சுற்றுவட்டம், லோட்டஸ் சுற்றுவட்டம் மற்றும் பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam