பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விடயம்: வெளிவந்துள்ள தகவல்
பேருந்து சாரதிகளை கண்காணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் அடங்கிய GPS மற்றும் CCTV அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் இந்த அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
AI அமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகள் இரண்டிலும் AI அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து சாரதியின் செயல்பாடுகள், அவர் சோர்வாக இருக்கிறாரா, தூக்கத்தில் இருக்கிறாரா, அல்லது வாகனம் ஓட்டும்போது தொலைபேசி அழைப்புகளைச் செய்கிறாரா என்பதைக் கண்காணிக்கவும் இந்த அமைப்பு உதவும்.
AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி CCTV மற்றும் GPS அமைப்புகள் SLTB மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் நிறுவப்படும் என்றும், அவை வழித்தட அனுமதியுடன் வழங்கப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
