அந்நிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய பயிர் செய்கை நடைமுறைகள்! மகிந்த அமரவீர
விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம் குறுகிய நிலப்பரப்பில் அதிக விளைச்சலை பெறக் கூடியதும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய வகையில் அந்நிய செலாவணியை ஈட்டித் தரக் கூடிய பயிர் செய்கை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வாகரை மாங்கேணி கேலிஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
வாகரை பிரதேசத்தில் பிப்பிங்காய் (கக்கரிக்காய்) உற்பத்தியில் மேற்படி திட்டத்தின் ஏற்றுமதி மூலம் 34.8 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி பெறப்பட்டுள்ளது என்றும் குறித்த திட்டத்திற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர் செலவானதாகவும் முழுதிட்டத்திற்கான செலவை விட வருமானம் தாண்டி நிற்கிறது என்றார்.
இதேபோன்று அனுராதபுரத்தில் இத்திட்டத்தின் கீழ் நவம்பர் 26 ஆம் திகதியில் இருந்து புளிக்கதலி வாழைப்பழம் வாராந்தம் ஒரு கெண்டயினர் டுபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொய்யா, மா, மிளகாய் போன்றவை பாரியளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இந்திய இன மாதுழம் பழச் செய்கையும் கட்டம் கட்டமாக செய்கை பன்னப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் தேவையினை 50 வீதம் ஏனும் பூர்த்தி செய்ய முடியும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் இவ்வாறான திட்டம் மூலம் இளைஞர்கள் வெளிநாடு செல்லவோ அரசாங்க வேலைவாய்ப்பினை நம்பி இருக்கவோ தேவையில்லை. சுயதொழிலில் ஈடுபட்டு பாரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்கு நல்லதெனவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய பிரதி திட்டப்பணிப்பாளர் ஆர்.ஞானச்செல்வம் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் வாகரை பிரதேசத்தில் மாங்கேணி மற்றும் கதிரவெளி ஆகிய கிராமங்களுக்கு சென்ற அமைச்சர் மாங்கேணியில் பிப்பிங்காய் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு சென்று பார்வையிட்டதுடன் பயிர் செய்கையாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது பிப்பிங்காய்களின் உற்பத்தியில் விற்பனை விலை தமக்கு போதாமல் உள்ளதமாகவும் அதன் விலை அதிகரிப்பின் நிர்ணய விலையினை தீர்மானித்து தருமாறும் குடியிருப்பு காணிகளுக்கு மின்சாரம் இல்லாமல் உள்ளதாகவும் அதனை பெற்றுத் தருமாறும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
வாகரை பிரதேசத்தில் தற்போது சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பிப்பிங்காய் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாங்கேணியில் பிப்பிங்காய் பதனிடும் கேலிஸ் நிறுவனத்தையும் பார்வையிட்டதுடன் கதிரவெளியில் நிலக்கடலை பதனிடும் மையத்தில் நிலக்கடலை பதனிடல் தொடர்பான விடயங்களையும் அவதானித்தார்.
பின்னர் களுவாஞ்சிக்குடியில் இந்திய மாதுளை பழப் பயிர் செய்கை நடவடிக்கையினையம் பார்வையிட்டதுடன் 6 கோடி ரூபாய் பெறுமதியான உழவு இயந்திரம், கலப்பை உட்பட உதிரிப்பாகங்கள் என்பன விவசாய நவீன மயமாக்கல் பயனாளிகள் சங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனும் பிரசன்னமாயிருந்தார். கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பிரதேச செயலாளர்கள் விவசாய அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.



விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam