லண்டனில் சிறப்பாக இடம்பெற்ற அகம் அனைத்துலக நிறுவன தொடக்க விழா (PHOTOS)
தென்கிழக்கு லண்டன் புறொம்பிளியில் அகம் அனைத்துலக நிறுவன தொடக்க விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு தென்கிழக்கு லண்டன் புறொம்பிளியில் கடந்த 05.05.2023 அன்று [South east London, Bromley, இடம்பெற்றுள்ளது.
இதன்போது நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கினை 1970ல் தமிழ் மாணவர் பேரவை ஆரம்பித்தவர்களில் முக்கியமான ஒருவரான பொன்னுத்துரை சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் அகம் அனைத்துலக நிறுவன சுவிஸ் செயற்பாட்டாளர், நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் சுவீடன் செயற்பாட்டாளர்,பிரித்தானிய செயற்பாட்டாளர்கள் ஏற்றி வைத்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக பிரித்தானிய கொடி, தமிழீழ தேசியக்கொடி மற்றும் அகம் அனைத்துலக நிறுவனகொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அகம் அனைத்துலக நிறுவன பொறுப்பாளர் பாபு கொள்கையுரையை ஆற்றியுள்ளார். அவர் ஆற்றிய உரை பின்வருமாறு,
“அனைவரும் ஒன்றிணைந்து எமது அரசியல் தீர்வுக்கான சாணக்கிய பொறி முறைகளை வலுப்படுத்தி எமது இலட்சியத்தை வென்றெடுக்க ஒன்றுபடல் வேண்டும்.
இந்நன்னாளில் தேசியத்தோடு நிற்கும் அனைத்து மக்களையும், அமைப்புக்களையும் அகம் நேசக்கரம் நீட்டி வரவேற்பதுடன் “நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல்” நாங்கள் எல்லோரும் இணைந்து எமது இலட்சியத்தை வென்றெடுப்போம் என்றும், அகத்தின் மிக முக்கியமான விடயமாக இளையோரை உள்வாங்குதல் அமையும் என்றும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களின் நுட்ப அறிவையும் கொண்டு அவர்களை வருங்கால தலைவர்களாக்குவதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ச.வி கிருபாகரன் - பொதுச்செயலாளர் தமிழர் மனித உரிமை மையம், பிரான்ஸ் அவர்களால் சிறப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அதில் ‘அகத்தின் தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் சம்பந்தமாகவும், அத்துடன் தற்கால அரசியல் சூழல் சம்பந்தமாகவும் உரையாற்றியுள்ளார்.
மேலும், அரங்க நிகழ்வாக தாயகப்பாடல்கள், நடனம், கவிதை மற்றும் தமிழர் பாரம்பரியக் கலையான சிலம்பம் ஆகியன இடம்பெற்றுள்ளதுடன், இறுதியாக கொடியேற்றல் நிகழ்வுடன் அகம் சர்வதேச நிறுவனத்தின் தொடக்க விழா இனிதே நிறைவுபெற்றுள்ளது.









