யாழில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம் தீவிரம்
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக இன்று(27.02.2026) பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் குறித்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அந்த கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்போது பெருமளவில் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தாபல் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்து வழங்கியிருந்தனர்.










100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan