அக்டோபருக்கு பின் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் - ஹிருணிகா
அக்டோபர் மாத இறுதியின் பின்னர் நாட்டுக்குள் மிகப் பெரிய மக்கள் புரட்சி ஆரம்பமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தலங்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களின் போஷாக்கு வேலைத்திட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வீதியில் இறங்க போவது மிகவும் வறிய மக்கள்

அக்டோபர் மாதத்திற்கு பின்னர் சுனாமியை போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி நாட்டுக்குள் ஏற்படும். அதனை எந்த வர்த்தமானி அறிவித்தல் மூலமும் நிறுத்த முடியாது. அக்டோபர் மாதத்திற்கு பின்னர் வீதியில் இறங்க போவது மிகவும் வறிய மனிதர்கள்.
இரண்டில் ஒன்றை பார்க்கவே அவர்கள் வீதியில் இறங்குவார்கள். வீட்டில் இருக்கும் அப்பாவி பிள்ளை பசியால் அழும் போது, தந்தையால் சும்மா இருந்து விட முடியாது. அப்போது அந்த தந்தை இரண்டில் ஒன்றை பார்த்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியில் இறங்குவார்.
முழு அரசியல் முறைமையும் மாறும்

அப்படி வெளியில் வரும் மக்களுடன் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டு எதனை செய்தாலும் ரணில் ராஜபக்சவினால், மோத முடியாது. முழு அரசியல் முறைமையும் மாறும். ஆளும், எதிர்க்கட்சி என அனைவருக்கும் நாடு முற்றாக அடுத்த பக்கத்தை நோக்கி மாறும் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam