இலங்கையில் ஆபிரிக்க பன்றி காய்ச்சல்: வெளியிடப்பட்ட வர்த்தமானி
இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கும் ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார இயக்குநர் ஹேமாலி கொத்தலாவாலா வெளியிட்டுள்ள இந்த வர்த்தமானி, 2025 ஜூன் 13 முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
இந்த அறிவிப்பு,பன்றிகளையும் ஆபத்தான விலங்குகளாகக் குறிப்பிடுகிறது. அண்மைய மாதங்களில் நாடு முழுவதும் பல பகுதிகளில் ASF என்ற, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல், தொடர்ந்து பரவி வருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க பன்றி காய்ச்சல்
வர்த்தமானியின்படி, அதிக ஆபத்துள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை பாதிக்கப்பட்ட மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குள் அல்லது வெளியே கொண்டு செல்வது, அகற்றுவது அல்லது நகர்த்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக, பாதிக்கப்பட்ட விலங்குகளை படுகொலை செய்வது மற்றும் அதிக ஆபத்துள்ள விலங்குகளை உள்ளடக்கிய நேரடி சந்தைகளை வைத்திருப்பது ஆகியவை அந்தந்த பிரிவு கால்நடை மருத்துவரிடமிருந்து சிறப்பு அனுமதி பெறப்படாவிட்டால், தடை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 22 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
