ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு விதிக்கப்பட்ட போட்டித்தடை
காபூல் பிரீமியர் லீக்கின் (KPL) 2வது பதிப்பின் போது ஏசிபி மற்றும் ஐசிசி ஊழல் தடுப்பு விதிகளை மீறியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் இஹ்சானுல்லா ஜனத் ( Ihsanullah Janat) அனைத்து வகையான கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார்.
முறையற்ற செல்வாக்கு அல்லது போட்டியின் முடிவு, முன்னேற்றம், நடத்தை அல்லது வேறு எந்த அம்சத்தையும் சரிசெய்வதற்கான முயற்சிகளை உள்ளடக்கிய ஐசிசி ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 2.1.1ஐ மீறியதற்காக ஜனத் குற்றவாளியாக கண்டறியப்படடுள்ளார்.
விசாரணைகள்
இந்த விதி மீறலினால், கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனத் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதுடன், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், ஏசிபி ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) மேலும் மூன்று வீரர்களும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களின் குற்றத்தை உறுதிப்படுத்திய பின்னர் இது தொடர்பான முடிவுகள் எட்டப்பட்டு, இஹ்சானுல்லா ஜனத் மீதான தடை இந்த அறிக்கை வெளியானவுடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam