ஆப்கானிஸ்தானில் கோர விபத்து: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் கெராஸ்க் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எண்ணெய் தாங்கி வாகனம் ஒன்றுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டள்ளன.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று (17.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
சம்பவத்தின்போது ஹெராத் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்குப் பயணித்த உந்துருளி, எரிபொருள் வாகனம் மற்றும் பேருந்து ஆகியவை காந்தஹார் - ஹேராத் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் மீது மோதிய பின்னர் பேருந்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் பயணித்த எண்ணெய் வாகனம் மீது மோதியுள்ள நிலையில் தீ பரவலும் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 38 பேரில் 11 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹெல்மண்ட் மாநில பொலிஸ் தலைமைப் பேச்சாளர் ஹசதுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
