ஒக்டோபர் முதல் மொஸ்கோவிலிருந்து ஆரம்பமாகும் ஏரோஃப்ளோட் விமான சேவை
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை, ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மொஸ்கோவிலிருந்து கொழும்புக்கு விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதன்படி, நிறுவனம் ஆரம்பத்தில் வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்கும்.
தாய்லாந்தின் பேங்காக்கிற்கான விமானங்கள் அக்டோபர் 30 ஆம் திகதி மீண்டும் தொடங்கும், மேலும் வாரத்திற்கு ஏழு விமானங்கள் அங்கு சேவையில் ஈடுபடும்.
ஏரோஃப்ளோட் விமான சேவையின் அறிவிப்பு

அத்துடன் நவம்பர் 2 ஆம் திகதி முதல் இந்தியாவின் கோவாவிற்கு வாரத்திற்கு மூன்று விமானங்கள் வரை விமானம் இயக்கப்படும் என ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.
ஏரோஃப்ளோட், தனது விமானம் ஒன்று கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் இலங்கைக்கான விமானங்களை நிறுத்திக்கொண்டது.
விமானத்தை குத்தகைக்கு எடுத்தவருடன் தொடர்புடைய ஒரு ஐரிஷ் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே விமானம் தடுத்து வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் அமைச்சர்
பந்துல குணவர்தன இலங்கையின் சார்பில் மன்னிப்பு கோரினார்.
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri