போதையில் எம்.பி ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு கூறிய அறிவுரை
யுத்தம் செய்ததை விட பெரும் பாரதூரமான வேலையே இராசாயன பசளையை நிறுத்தியது. இதை கைவிட்டு விடுங்கள். அப்படியில்லை என்றால் அரசும், உங்கள் பதவியும் பறிப்போகும் என நான் தான் முதன் முதலில் சொன்னேன் என சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த விருந்துபசாரத்தில் சிறிதளவு மதுவும் அறிந்தியிருந்த நிலையில் அமைச்சர்கள் 20 பேர் மத்தியிலேயே கோட்டாபயவுக்கு இதனை கூறினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சுதந்திர கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மஹிந்தானந்த கூறிய விடயம்
தொடர்ந்து பேசிய அவர், மஹிந்தானந்த அளுத்கமகே தான் விவசாய அமைச்சராக இருந்தார்.இன்று சிறையில் இருக்கிறார்.நான் கதைத்த பின்னர், கோட்டாபய 'இராசாயன பசளை நிறுத்தம் நல்ல வளர்ச்சியை காட்டியுள்ளது தானே' என மஹிந்தானந்தவிடம் கேட்ட போது அவர் 'நன்றாக இருக்கிறது என்றார்' 'அப்போது நான், பார்த்துக் கொண்டிருங்கள் என்ன நடக்கப் போகிறது என்றேன்'. ஒரு வருடம் போகவில்லை. எல்லாம் முடிந்தது.
பெரும் எதிர்ப்பாப்புடன் 65 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் நாங்கள் அரசை வீழ்த்தவில்லை. அவர்களே தங்களுக்கான குழியை வெட்டிக் கொண்டனர்.
அதேபோல இந்த அரசாங்கமும் விவசாயிகளை வீழ்த்துகிறது.வெங்காயம் மற்றும் கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அவர்களை பாதுகாப்பதில் தவறிழைத்துள்ளது என்றார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan