ஜனாதிபதிக்கு பிரபல பெண் ஜோதிடர் வழங்கியுள்ள ஆலோசனை?
மாகாணசபை தேர்தலை தற்போதைக்கு நடாத்த வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரபல பெண் ஜோதிடர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் ஜோதிடரான ஞானமேனி என்பவரே ஜனாதிபதிக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பெண் ஜோதிடரை சந்திக்க சென்ற அமைச்சர்களிடம் , மாகாண சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை ஜனாதிபதிக்கு வழங்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்குப் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பதே இந்த குழுவினரது கருத்தாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முனைப்புக் காட்டிவருகின்ற நிலையில், மறுபக்கம் அதற்கெதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri