கொழும்பில் பெறுமதியான 3 இடங்களை விற்பனை செய்ய தயாராகும் அரசாங்கம்
கொழும்பில் மேலும் 3 பெறுமதியான காணிகளை 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விளம்பரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 3 காணிகளுக்கு இவ்வாறு விலை மனு கோரப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளியான அறிக்கைக்கு அமைய, கொழும்பு 10 டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் இலக்கம் 12இல் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடம், இலக்கம் 38இல் அமைந்துள்ள மக்கள் வங்கி கிளையின் அமைந்துள்ள இடம் மற்றும் இலக்கம் 40இல் அமைந்துள்ள சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை இந்த திட்டத்திற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவாகும். மக்கள் வங்கி கிளையின் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவாகும்.
சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 1.6 பில்லியன் ரூபாவாகும்.
இந்த காணிகளின் செயற்பாடுகளுக்காக யோசனை முன்வைப்பதற்கு ஒரு மாத காலப்பகுதியே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam