தந்தையின் பொறுப்பற்ற செயலால் பரிதாபமாக உயிரிழந்த மகள்
புத்தளம், வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க.பொ.த உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தலைக்கவசம்
விபத்து நடந்த நேரத்தில் சிறுமி தலைக்கவசம் அணியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது தாயும் சகோதரியும் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த மாணவியும் அவரது தந்தையும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான இடத்தில் மோதியதில் மாணவி மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துள்ளார்.
தந்தை கைது
விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி தங்கொட்டுவ மருத்துவமனையிலும், அங்கிருந்து நீர்கொழும்பு மருத்துவமனைக்கும் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்ற தந்தை கைது செய்யப்பட்டு, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
