ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8ஆம் திகதி தவணையிட யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 15ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று (28.02.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
மேலும் சில சந்தேகநபர்களை வழக்கில் இணைக்கப்படவிருப்பதால் பதில் நீதவான் தவபாலன் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.
குறித்த வழக்கில் சட்டத்தரணி க.சுகாஷ் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.