முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கக்கோரும் மனு மீதான மேலதிக விசாரணையை ஜூன் 08 ஆம் திகதி வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
அத்துடன் பிரதிவாதிகள் அதே நாளில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
முன்னதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் செயற்குழு அதிகாரிகள் இன்று 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி மனு மீதான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியிருந்தது.
12 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரச ஊழியர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முத்தையா முரளிதரன், சிதத் வெத்தமுனி, மைக்கேல் திஸ்ஸெரா, மற்றும் முன்னாள் நிர்வாகிகள் விஜய மலலசேகர, குஷில் குணசேகர, சோமசுந்தரம் ஸ்கந்தகுமார், அனா புஞ்சீஹேவா மற்றும் ரியென்சி விஜெதிலக்க ஆகியோர் அடங்குகிறார்கள்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 20 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam