பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பளை நீர் விநியோகத் திட்டங்களை ஆசிய அபிவிருத்தி பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவினர் பளையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோக நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு, பொது மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டனர்.
ஆசிய வங்கி பிரதிநிதிகளுடன் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டனர்.
பளை பிரதேசத்தில் பெரும்பாலான பகுதிகளின் நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற நீராக காணப்படுவதோடு வறட்சி காலத்தில் குடிநீர் உட்பட நீர்த் தேவைகளுக்கு நெருக்கடியும் ஏற்பட்டு வருகின்றது.
நீர் விநியோக நடவடிக்கைகள்
இந்தநிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்படுகின்ற குடிநீர் விநியோக நடவடிக்கைகள் பொது மக்களின் நெருக்கடி தீர்ப்பதாக அமைந்துள்ளதாக தெரிவித்த மக்கள், பல பிரதேசங்களுக்கு தற்போது வரை நீர் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
எனவே, இது விடயம் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது பளை பிரதேசத்திற்கான நீர் விநியோக நடவடிக்கைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொது மக்கள் குழாய் வழி குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கி உரிய கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நீர் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 2 நாட்கள் முன்

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri
