இலங்கை திட்டத்தில் இருந்து விலகிய அதானி! உயர்வை சந்தித்த பங்குகள்
இலங்கையில் அதன் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விலகுவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 3% உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டத்தின் நம்பகத்தன்மை குறித்த கவலைகளைத் தணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கயைின் புதிய அரசாங்கம் கடந்த மாதம் திட்டம் தொடர்பில் குறைந்த கட்டணங்களைக் கோரியதைத் தொடர்ந்து, இரண்டு காற்றாலை மின் திட்டங்களிலிருந்து வெளியேற அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி
இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து விலக இந்தியாவின் அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆலைக்கு அரசு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அது தொடர்பான முடிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலத்தை விடுவிக்கும் போது எழுந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளாலும் இது திட்டத்தின் எதிர்கால இலக்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மொத்தம் 1 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்ட திட்டங்களிலிருந்து மின்சார செலவைக் குறைக்க அதானி குழுமத்துடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
திட்ட முன்மொழிவு தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட மற்றொரு பேச்சுவார்த்தைக் குழு மற்றும் திட்டக் குழு அமைக்கப்படும் என்று அறியப்பட்டது, என நிறுவனம் ஒரு கடிதத்தில் கூறியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள்
மேலும் குறித்த நிறுவனம் இலங்கையின் இறையாண்மை உரிமைகளையும் அதன் தேர்வுகளையும் முழுமையாக மதிக்கிறது என்றாலும், அந்த திட்டத்திலிருந்து மரியாதையுடன் விலகுவதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமத்தின் பில்லியனர் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் பிற நிர்வாகிகள் இந்திய மின்சார விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு இலஞ்சம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இலங்கை அதானி குழுமத்தின் உள்ளூர் திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.

எனினும் அதானி தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தனர்.
இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பில் 700 மில்லியன் டொலர் முனையத் திட்டத்தைக் கட்டுவதிலும் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியின் போது முடக்கப்பட்ட மின் தடை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் பணமில்லாது பாதிக்கப்பட்ட இலங்கை, தற்போது இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan