இலங்கையில் இருந்து முதலீடுகள் வெளியில் செல்வது நல்ல அறிகுறியல்ல: சஜித் கட்சியின் இளைஞர் பிரிவு
இலங்கையில் காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டத்திலிருந்து விலகும் அதானி கிரீன் எனர்ஜியின் முடிவு நாட்டிற்கு நல்ல அறிகுறி அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான முதலீடுகள் வெளியே செல்வது அல்ல, உள்ளே வருவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி மன்னாரில் உள்ள எரிசக்தி திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்தது.
அதானியின் அறிவிப்பு
அத்துடன், கடந்த வாரம் இலங்கையில் செயல்பாடுகளை நிறுத்துவதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா அறிவித்ததைத் தொடர்ந்தே அதானியின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இலங்கையில் இருந்து நிறுவனங்கள் வெளியேறும்போது பொருளாதார மன்றங்களில் உரை நிகழ்த்துவது அர்த்தமற்றது என்று சமித் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
