மாணவர்கள் மீதான சைபர் மிரட்டல்! கல்வி அமைச்சின் நடவடிக்கை
மாணவர்கள் மீதான சைபர் அத்துமீறல் மற்றும் பாலியல் ரீதியான தாக்கங்கள் ஆகியவற்றைத் தடுக்க சைபர் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்கும் செயல்முறையை கல்வி அமைச்சு தொடங்கவுள்ளது.
கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்த இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பாதுகாப்பைக் கையாள தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடுமையான தண்டனை
குழந்தைகள் மீதான அத்துமீறல்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் சமீபத்தில் வெளியிட்ட ஒரு கூட்டு விரிவான ஆய்வில், சைபர் மிரட்டல் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வியை வலுப்படுத்துவது அவசியம் என்றும், அத்தகைய நடத்தைக்கு எதிராக ஒரு தடுப்பு இருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது.
பாடசாலை குழந்தைகளிடையே மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அதிகரித்துள்ளதாகவும், எனவே, தேவைப்பட்டால் குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் ஆலோசனை மையங்களை அமைச்சகம் நிறுவும் என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. அவரே போட்ட பதிவு, குவியும் ஆறுதல் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

சாம்சங்கில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு.., UPSC தேர்வில் வெற்றி பெற்ற நபர் யார்? News Lankasri
