நாடு முழுவதும் நடமாடும் விற்பனை வாகனங்களை ஈடுபடுத்த நடவடிக்கை!
அத்தியாவசிய பொருட்களுடனான நடமாடும் விற்பனை வாகனங்களை எதிர்வரும் 31ம் திகதியளவில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபடுத்துவதற்கான ஓழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7ம் திகதி காலை 4.00 மணி வரையில் தற்போதைய பயணக்கட்டுபாடு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகிறது. மருந்தகங்களை மாத்திரம் இக்காலப்பகுதியில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேபோன்று பொருளாதார மத்திய நிலையங்கள் 31ம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். இம்மாதம் 31ம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 25ம் திகதி பொது மக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதி தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பத்திரங்களை வழங்குவது பிரதேச செயலாளர்களின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri