பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
பதிவு செய்யப்படாத மதஸ்தலங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டின் சமய பதிவாளர்களுடன் புத்தசாசன அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் விதுர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதிவு செய்யப்படாத மதஸ்தலங்கள் மூலம் மக்களை மதமாற்றம் செய்வதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமய விகாரைகள் மற்றும் பிக்குகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிக்குகளுக்கும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
16-வது திருமண நாளைக் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி ... குவியும் வாழ்த்துக்கள் Manithan