வவுனியாவில் கட்டாக்காலி மாடுகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித் திரிந்த 50 கட்டாக்காலி மாடுகள் நேற்று (20.03.2025) இரவு பிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா நகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்து நகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்களுக்கு அறிவித்தல்
அந்தவகையில் நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் நகர சபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.
எனவே, கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்திய பின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச் செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, கட்டாக்காலி மாடு பிடி கூலி ஆயிரம் ரூபாய், தண்டப்பணம் மூவாயிரம் ரூபாய், நாள் ஒன்றிற்கான பராமரிப்புக் கட்டணம் ஆயிரம் ரூபாய் என்பவற்றை செலுத்த வேண்டும்.
10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகர சபை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








ஹீத்ரோ தீ விபத்தின் பின்னணியில் விளாடிமிர் புடின்... ரஷ்ய சதி குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
