ஈரானுக்கு எதிராக பிரித்தானியா எடுத்துள்ள நடவடிக்கை
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
கடந்த 01.10.2024 அன்று இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடாத்தியிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமதாகவே பிரித்தானியா இந்தத் தடையை இன்று (14.10.2024) அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சரின் கருத்து
குறித்த தடைகள் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், வான்படை தலைவர்கள் மற்றும் பாலிஸ்டிக் மற்றும் கிரூஸ் ஏவுகணை வளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்புகள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரானால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் மேலும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், G7 நாடுகள் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளதோடு இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam