ஒரு நாடு நூறு சட்டங்கள்! - சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இராணுவத்தினரின் செயல்
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு படையினர் வழங்கிய தண்டனை தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் இன்று காலை இராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டனர். இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டமா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் “ஒரு நாடு நூறு சட்டங்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், மேல்மாகாணத்தில் வீதிகளில் பெருமளவு வாகனங்கள் காணப்படும் படங்களையும் மட்டக்களப்பில் தண்டனை வழங்கப்பட்ட படத்தினையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Western Province Vs Eastern Province ! #1country100laws pic.twitter.com/d4VZUehBjg
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) June 19, 2021