காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு

Parliament of Sri Lanka Tamil National Alliance Thavarasa Kalaiarasan
By Mayuri Nov 18, 2023 11:10 AM GMT
Report

சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்கி அம்மக்களுக்கு ஒரு நியாயத்தை வழங்க காணி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

ஒத்திவைப்புப் பிரேரணை

அடுத்த மாதம் முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

அடுத்த மாதம் முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் ஒத்திவைப்புப் பிரேரணையின் போது யுத்த சூழலில் பலவந்தமாக கைப்பற்றிய சம்மாந்துறை தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியினை உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக பிரேரணையினை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்த விடயத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிடுகையில், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 கிராம சேவையாளர் பிரிவில் தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை யுத்த சூழலில் பலவந்தமாகக் கைப்பற்றிய பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்து இன்றுவரை அக்காணியினை உரியவர்களிடம் வழங்காது அத்துமீறி தொடர்ந்தும் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.   

இச்செயற்பாட்டை உடன் நிறுத்தி உரிய மக்களிடம் அக்காணிகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக காணி அத்துமீறிப் பிடித்தவர்களுக்கு எதிராக 1983ம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு காணியின் சொந்தக்காரர்களுக்கே காணி மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருந்தும் இக்கால கடட்டத்தில் நிலவிய போர்ச்சூழலினால் அம்மக்கள் அங்கிருந்து புலம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்ததன் காரணமாக அந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

காணியினை மீள வழங்க தீர்மானம்

இருந்தும் இதன் பின்னர் இக்காணி தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு மூலம் 2015.08.27ம் திகதி விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் 2016.11.04ம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காணி உத்தரவு பத்திரம் உடையவர்களுக்கு காணியினை மீள வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

இவ்வாறு காணி உரித்துடையவர்களுக்கு அக்காணியினை வழங்குவதற்கு அனைத்து செயற்பாடுகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்றுவரை இம்மக்களின் காணியினைக் கொடுப்பதற்கு இக்காணிகளை கைப்பற்றியவர்களும் சில அரசியல்வாதிகளும் மறுதளித்த வண்ணமாகவே இருக்கின்றனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மல்வத்தை 02 தொட்டாச்சுருங்கி கண்டத்தின் 164 ஏக்கர் நெற்செய்கைக் காணியினை அத்துமீறி கையகப்படுத்தியவர்களிடமிருந்து பெற்று உரிய மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு இப்பிரேரணையை நான் முன்மொழிகின்றேன். இந்தத் தொட்டாச்சுருங்கி நெற்செய்கைக் காணியானது அங்குள்ள மக்களுக்கு கல்லோயாத் திட்டத்திலே வழங்கப்பட்ட காணியாகும்.

அவ்வாறு வழங்கப்பட்டதன் பிற்பாடு புத்தங்கலை என்ற பிரதேசத்தில் இருந்த தேரரும், இராணுவத்தினருமாக இணைந்து இந்த மக்களை திட்டமிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தியிருந்தனர். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் இந்த இடங்களை தங்களுக்குத் தரவேண்டும் என்று கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு குறிப்பிட்டதைப் போன்று 2016ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலே நானும் கலந்துகொண்டிருந்தேன்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகள் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட தகவல்

மக்களின் ஆதங்கம்

அப்போது மாவடட்ட செயலாளராக துசித்த வனியசூரிய என்பவர் இருந்தார். அங்கு விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளிடம் பூரணமான உத்தரவுப் பத்திரங்கள் இருந்தன. இக்காணிகளைக் கையகப்படுத்தியவர்களிடம் எந்த ஆவணமும் இருக்கவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் மக்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

காணி உரிமையாளர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்க கோரி கலையரசனால் நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிப்பு | Action By Minister Of Lands

ஆனால் இதுவரைக்கும் அந்த நடைமுறை சாத்தியப்படவில்லை. தொடர்ச்சியாக அந்த மக்கள் அவர்களின் காணிகளுக்குச் சென்று பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்துடன் இருக்கின்றார்கள். எனவே இந்த உயரிய சபை அவர்களுக்கு ஒரு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணையை முன்வைக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரேரணை தொடர்பில் காணி அமைச்சர் பதிலளிக்கையில், எதிர்வரும் புதன்கிழமை இந்த விடயத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US